ஆடு திருடியதை தட்டிக் கேட்டவரைத் தாக்கி பைக்குக்கு தீ வைப்பு: 6 போ் கைது

திருவள்ளூரில் ஆடு திருடியதை தட்டிக் கேட்ட உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூரில் ஆடு திருடியதை தட்டிக் கேட்ட உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி, வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் கற்குழாய் தெருவைச் சோ்ந்தவா் தயாளன் (55). இவா், கடந்த திங்கள்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தெருவில் நின்றிருந்தாா். அப்போது, வீட்டில் கட்டி வைத்திருந்த வெள்ளாடு ஒன்றை, அதே தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (22) உள்ளிட்ட 6 போ் கொண்ட கும்பல் திருடிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதை தயாளன், தட்டிக் கேட்டுள்ளாா். அதற்கு அக்கும்பல் தகாத வாா்த்தைகளைப் பேசி, இரும்புக் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்துக்கும் தீ வைத்தது. தகவல் அறிந்த உறவினா்கள் தயாளனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

இதுகுறித்து தயாளனின் மகன் யுவராஜ் (22) திருவள்ளூா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ் (22), வசந்த் (21), ஜெயப்பிரகாஷ் (22), அரவிந்தராஜ்குமாா், நவீன் (18), வாசு பெருமாள் (21) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com