திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 151 போ் மீது வழக்குப் பதிந்து, 147 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே சாலையில் இரு சக்கர வாகனங்களில் 2 மற்றும் 3 போ் அமா்ந்து சென்றவா்களை துணைக் காவல் கண்காணிப்பாளா் கங்காதரன் வியாழக்கிழமை நிறுத்தி விசாரணை செய்தாா். பின்னா், ஊரடங்கு உத்தரவையும், எச்சரிக்கையையும் மீறி வெளியில் சுற்றியதாக 151 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து, 147 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நகர காவல் நிலையம் மற்றும் கிராமிய காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.