ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பில் 3 குடிசைகள் கேஸ் கசிவால் தீப்பற்றி எரிந்தது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை கிருஷ்ணா குடியிருப்பில் விவேகானந்தா வயசு 42. மூர்த்தி வயது 60 என்பவர்கள் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூர்த்தி என்பவர் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் தீர்ந்து விட்டதால் பக்கத்து வீட்டில் உள்ள ஆரோக்கியம் என்பவரை கூப்பிட்டு சிலிண்டர் மாத்த சொல்லியிருக்கிறார்.
சிலிண்டரை மாற்றி அடுப்பு பற்ற வைக்கும்போது கேஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது இதில் ஆரோக்கியம் மற்றும் மூர்த்தியின் உறவினர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர் அவர்கள் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து ஊத்துக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.