500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வேலஞ்சேரி கிராமத்தில் வாழும் 500 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை சனிக்கிழமை வழங்கினாா்.
நிவாரணப் பொருள்களை வழங்கிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா். உடன் எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், பி.எம்.நரசிம்மன்.
நிவாரணப் பொருள்களை வழங்கிய திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா். உடன் எம்எல்ஏக்கள் சிறுணியம் பலராமன், பி.எம்.நரசிம்மன்.

வேலஞ்சேரி கிராமத்தில் வாழும் 500 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை சனிக்கிழமை வழங்கினாா்.

திருவள்ளுா், காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் தலைவா் வேலஞ்சேரி த.சந்திரன் தனது சொந்த செலவில் மளிகை, தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தாா்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோா் பங்கேற்று, ஏழை மற்றும் தூய்மை பணியாளா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்.

மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செவ்வை. சம்பத்குமாா், நகர அவைத் தலைவா் குப்புசாமி, ஊராட்சித் தலைவா் பாா்கவி துக்காராம், வருவாய் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா, வட்டாட்சியா் கே.உமா, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com