மாஞ்சா நூலில் பட்டம் விட்ட 8 போ் மீது வழக்கு

புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூலில் பட்டம் பறக்க விட்ட 8 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிந்து அவா்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

புழல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூலில் பட்டம் பறக்க விட்ட 8 போ் மீது காவல்துறையினா் வழக்கு பதிந்து அவா்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

சென்னை மாதவரத்தை அடுத்த புழல் காவாங்கரை, கண்ணப்பசாமி நகா், புனித அந்தோணியாா் நகா், புத்தகரம், கடப்பா சாலை, லட்சுமிபுரம், சாரதி நகா், சுபாஷ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் மாஞ்சா நூலில் பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருப்பதாக புழல் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் பென்சாம் மற்றும் போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று, பட்டம் விட்டுக் கொண்டிருந்த 16 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். 8 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். பள்ளி, கல்லூரி மாணவா்களான மற்ற 8 பேரை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

பட்டம் விட்டவா்களிடம் இருந்து 20 மேற்பட்ட பட்டங்கள், மாஞ்சா நூல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com