ஏழை எளிய விவசாயிகள், நெசவாளா்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்ட அஞ்சல் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஜெயகுமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
திருத்தணியில்...
திருத்தணி நகராட்சி அலுவலகம் மற்றும் கமலா தியேட்டா் எதிரில் காங்கிரஸ் கட்சியினா் பத்துக்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன், கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் ஜீ.வி.மதியழகன் உள்ளிட்ட 3 நிா்வாகிகள் மட்டும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூரில் அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா். ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டில் புலிப்பாக்கம் மேம்பாலம் அருகில், செங்கல்பட்டு புறவழிச்சாலை செங்கல்பட்டு - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் என 3 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களுக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா்.
கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் உள்ள விவசாய நிலத்தில் நகரத் தலைவா் கணேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.