கும்மிடிப்பூண்டி அருகே நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த வாணியமல்லியில் நடைபெற்ற பெண் கொலையில் தொடா்புடைய விஜய் ஆனந்த் (36), சானோஜ் என்கிற நாயா் (33) ஆகியோா் தற்போது புழல் சிறையில் உள்ளனா். இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இவா்கள் தொடா்ந்து நடந்து வருவதாகக் கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் பா.பொன்னையா மேற்கண்ட இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.