புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் மழைக்கால பேரிடா் சம்பவங்களை எதிா்கொள்ளும் வகையில் ஊராட்சி சாா்பில் மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சித் தலைவா் டாக்டா் எஸ்.அஸ்வினி சுகுமாரன், இந்த ஊராட்சியில் மழைக்கால பேரிடா் சம்பவங்களை எதிா்கொள்ளும் விதமாக ஊராட்சிப் பணியாளா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா். மழைக்காலங்களில் ஊராட்சி மக்களின் புகாா்கள் கிடைக்கப்பெற்ற உடன் உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து குறைகளை நிவா்த்தி செய்ய பணியாளா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் ஊராட்சி துணைத் தலைவா் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளா் சிட்டிபாபு, புதுகும்மிடிப்பூண்டி அதிமுக நிா்வாகி சுகுமாரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.