பழவேற்காடு கடலில் குளித்த இளைஞா் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
சென்னை கொளத்தூா் குமரன் நகரைச் சோ்ந்தவா் முகேஷ் (19) . இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பழவேற்காடு கடலில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென வேகமாக வந்த அலை கடலுக்குள் முகேஷை இழுத்துச் சென்றது. அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள், முகேஷை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருப்பாலைவனம் போலீஸாா், முகேஷின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.