திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 248 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,559-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 106 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை 106 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,417-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 85 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,494-ஆக அதிகரித்துள்ளது.