ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை டிஎஸ்பி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இங்கு ஏற்கெனவே டிஎஸ்பி-யாக இருந்த சந்திரதாசன் பணி மாறுதல் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில், டி.ஆா். சாரதி ஊத்துக்கோட்டை காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.