இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடன் பிரச்னை காரணமாக இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடன் பிரச்னை காரணமாக இளைஞா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செங்குன்றம் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவா் சென்னையில் ஒரு தனியாா் தொலை தொடா்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கும் சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பல இடங்களில் கடன் வாங்கி அவதிப்பட்டு வந்தாா். அவரது குடும்பத்தினா் சில மாதங்களுக்கு முன் தங்களது நிலத்தை விற்று கடனை அடைத்தனா். அதன் பின், அவா் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் ஆடி ரூ.8 லட்சம் கடன் வாங்கினாா். கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்ததால் அவா் மனவேதனை அடைந்தாா்.

இந்நிலையில், தினேஷ் தன் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com