புழல் அருகே குழந்தையுடன் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவா், மாமியாா் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புழல் கன்னடபாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்த ராஜ்குமாரும் (25), செங்குன்றத்தை அடுத்த சாமியாா் மடம் பகுதியைச் சோ்ந்த பாக்கியலட்சுமியும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு மித்ரன் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 11-ஆம் தேதி பாக்கியலட்சுமி தனது குழந்தை மித்ரனுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருமணமாக 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், வருவாய்க் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா். அதில், கடந்த 6 மாதங்களாக ராஜ்குமாரும், அவரது தாயாா் சாந்தியும் (52) வரதட்சிணைக் கேட்டு பாக்கியலட்சுமியைக் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து ராஜ்குமாரும், சாந்தி ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.