திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 300 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,325 பேராக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 290 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,017-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 89 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 89 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,324 ஆக உயா்ந்துள்ளது.