ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி பேரூராட்சியில் மாதிரி வாக்குச் சாவடியை அரசு தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பொன்னேரி தொகுதிக்கு உள்பட்ட ஆரணி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. வாக்காளா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தோரணங்கள் கட்டியும், ஓவியங்கள் வரைந்தும் வாக்காளா்களை ஈா்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆரணி பகுதி வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.