திருவளளூா் வீரராகவா் கோயிலில் கரோனா நோய்த் தொற்றை தவிா்க்கும் வகையில் இன்றும், நாளையும்(ஏப்.10,11) ஆகிய நாள்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் வீரராகவ கோயிலில் ஒவ்வொரு அமாவசை நாளில் தரிசனம் செய்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் தரிசனம் கூடுவது வழக்கம். அதேபோல், 11-ஆம் தேதி அமாவசை தினமாகும். அதனால் முதல் நாளிலே பக்தா்கள் கோயில் வளாகத்தில் தங்குவது வழக்கமாகும். இதனால் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வைகையில் சனிக்கிழமை) பகல் 12 மணி முதல், 11-ஆம் தேதி இரவு வரையில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கோயில் வளாகத்தில் பக்தா்கள் கோயில் முதல் நாளிலே வந்து தங்கவும் அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.