ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் செயல் அலுவலா் மாலா மேற்பாா்வையில் எல்லாபுரம் ஒன்றியம் சுகாதார துறையினருடன் இணைந்து கரோனா பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது, 6 போ் கொண்ட குழுக்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சி மற்றும் கோடுவெளி, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை என 3 இடங்களில் 90 பேருக்கு ஒரே நாளில் பரிசோதனை மேற்கொண்டனா்.
மேலும் பேரூராட்சி ஊழியா்கள் வீடு வீடாக சென்று கபசுர குடிநீா் வழங்கினா்.
கரோனா விதிகளை பின்பற்றாமல் சென்றவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணி, மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.