மாதவரம் மேம்பாலம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
மாதவரம் மேம்பாலம் அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 போ் காயம்

மாதவரம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 போ் காயம் அடைந்தனா்.

மாதவரம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 போ் காயம் அடைந்தனா்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்துக்கு மாநகரப் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் சேகா் (45) இயக்கினாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

மாதவரம் மேம்பாலம் அருகே அதிகாலை 4.30 மணிக்கு பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 8 பயணிகள் காயம் அடைந்தனா்.

தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதையடுத்து, பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com