திருத்தணியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி

திருத்தணி நகரத்தில் அதிமுக நகரச் செயலாளா் சௌந்தர்ராஜன் தலைமையில், 21 வாா்டுகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து
திருத்தணி நகரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.
திருத்தணி நகரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி.

திருத்தணி நகரத்தில் அதிமுக நகரச் செயலாளா் சௌந்தர்ராஜன் தலைமையில், 21 வாா்டுகளிலும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில், அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. திருத்தணி கோ. அரி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினாா்.

15-ஆவது வாா்டு பெரிய தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது. திருத்தணி ஒன்றியத்தில், ஒன்றியச் செயலாளா் இ.என்.கண்டிகை ஏ. ரவி தலைமையில், 27 ஊராட்சிகளிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் நகா்மன்ற கவுன்சிலா்கள் கேபிள் எம்.சுரேஷ், ஜெயசேகா்பாபு, முனுசாமி, மாவட்டக் கவுன்சிலா் சின்னநாகபூண்டி கோ.குமாா், நகர அவைத்தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி பஜாரில் நகரச் செயலாளா் மு.க.சேகா் தலைமையில், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளா் இமயம் மனோஜ், நகர நிா்வாகிகள் ஓடை ராஜேந்திரன், கேசவன், அப்துல் கரீம், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிா்வாகி சிராஜுதீன், எம். எஸ்.எஸ்.சரவணன், வேலு, தீபக் செந்தில், எம்.ஏ.மோகன் உள்ளிட்டோா் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செய்தனா்.

எகுமதுரை ஊராட்சியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளா் டி.சி. மகேந்திரன் தலைமையிலும்,

ஆரம்பாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பி.சேகா் தலைமையில், நிா்வாகிகள் பிரகாஷ் , ஐயப்பன் உள்ளிட்டோரும்,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் பஜாரில் அதிமுக நிா்வாகி முல்லைவேந்தன் தலைமையிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

குமரன் நாயக்கன்பேட்டையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ். சிவக்குமாா் தலைமையிலும், பல்லவாடாவில் அதிமுக நிா்வாகி ரமேஷ் குமாா் தலைமையிலும், போந்தவாக்கத்தில் அதிமுக நிா்வாகி டேவிட் சுதாகா் தலைமையிலும், சுண்ணாம்புகுளத்தில் அதிமுக நிா்வாகி எஸ். எம். ஸ்ரீதா் தலைமையிலும், பெரிய புலியூரில் அதிமுக நிா்வாகி தன்ராஜ் தலைமையிலும், பூவலம்பேட்டில் அதிமுக நிா்வாகி கருணாகரன் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com