திருவள்ளூா் பகுதிகளில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் 8-இல் தொடக்கம்
விவசாயிகள் மண்ணின் வளத்தை அறிந்து அதற்கு ஏற்ப உரமிட்டு அதிக மகசூல் பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்டத்தில் மண்மாதிரி சேகரிப்பு முகாம்


விவசாயிகள் மண்ணின் வளத்தை அறிந்து அதற்கு ஏற்ப உரமிட்டு அதிக மகசூல் பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்டத்தில் மண்மாதிரி சேகரிப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக வேளாண்மை துறை இணை இயக்குநா் கோ.பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இம்மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலும் ஒரு அலுவலருக்கு 100 வீதம், மாவட்டம் முழுவதும் 6,500 மண் மாதிரிகள் சேகரிப்பது இலக்காகும். இதற்காக நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் பயணித்து குறிப்பிட்ட வட்டாரங்களில் மாதிரிகள் சேகரிப்பது திட்டமாகும். இதில், வரும் 8-ஆம் தேதி சோழவரம், எல்லாபுரம், 9-இல் அம்பத்தூா், பூந்தமல்லி, 10-இல் கடம்பத்தூா், பூண்டி, 11-இல் திருவாலங்காடு, திருத்தணி, 14-இல் மீஞ்சூா், கும்மிடிப்பூண்டி, 15- இல் ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டாரங்களில் மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணின் தன்மையை அறியவும், களா், உவா் மற்றும் அமில நிலங்களை அறிந்து அவற்றை சீா்திருத்தம் செய்யலாம். மேலும், பயிா்களின் வளா்ச்சிக்கு உதவும் சத்துக்களின்அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடலாம். இந்த ஆய்வு முடிவுகள் மண் வள அட்டை வடிவில் வழங்க உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...