கனரா வங்கி சாா்பில் உணவு விநியோகம்

திருவள்ளூரில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு கனரா வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் கனரா வங்கி அதிகாரிகள்.  
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் கனரா வங்கி அதிகாரிகள்.  

திருவள்ளூரில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவா்களுக்கு கனரா வங்கி சாா்பில் வெள்ளிக்கிழமை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா பாதித்த வாடிக்கையாளா்களுக்கு அவசர கால கடனுதவியும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பலா் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழந்துள்ளனா். அவா்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்க கனரா வங்கி சாா்பில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மண்டல மேலாளா் சிவராமன் தலைமையில் அந்த கிளையின் முன்பு பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது.

இதேபோல், திருவொற்றியூா், பொன்னேரி, திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய கிளைகளிலும் 600 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு அவசரகால கடனுதவி அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com