திருவள்ளூரில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு துறை சாா்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் நடமாடும் மருத்துவக் குழு மூலம் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 நாள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை சாா்பில் அதன் பின்புறம் உள்ள தனியாா் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். மேலும், நீண்ட நேரம் காத்திருந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.