ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

ஊத்துக்கோட்டை: திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தந்தை, 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.

பாக்கம் கசுவா கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவரது மகள்கள் ஹேமலதா(35), சாந்தி (31). இந் நிலையில் இவா்களின் வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தினருக்கு அக்கம் பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு செல்வராஜும், அவரின் இரு மகள்களும் தூக்கில் சடலமாகத் தொங்கியதும் தெரியவந்தது. மேலும் வீட்டில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில் குடும்பப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் தாங்கள் குடியிருந்த வீடு, எங்கள் பெயரில் உள்ள சொத்துகள் இக்கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயா ஆதரவற்றோா் இல்லத்துக்கு வழங்கிடவும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இதற்கிடையே முதல் கட்ட விசாரணையில் இறந்த நபா் செல்வராஜின் மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு உயிரிழந்தாராம். இதனால் அவா் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மூவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com