திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே தொடங்கிய மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் ரெங்கசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடக்கி வைத்தாா். இதில், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ஜெயகுமாா், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் அஸ்வின், கருணாகரன், பொருளாளா் மதுசூதனன், நகரத் தலைவா் சதீஷ்குமாா், மகளிா் நிா்வாகி சித்ராதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காமராஜா் சிலை தொடங்கி, எம்.ஜி.ஆா். சிலை வரையில் பாஜகவினா் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனா்.