திருவள்ளூா் மாவட்டத்தில் மக்கள் நலப்பணி அறக்கட்டளை சாா்பில், பொன்னேரி வட்டத்தில் உள்ள மெதூா் உள்ளிட்ட 4 கிராமங்களில் 12,000 பனை விதைகள் நடவு செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள மெதூா், ஆவூா், திருப்பாலைவனம், அரசூா் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் நலப்பணி இயக்கத்தின் வாயிலாக பனை விதைகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 12,000 பனை விதைகளை மீஞ்சூா் வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் ராஜேஷ் வழங்கினாா்.
பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், மெதூா் கிராமத்தில் பனை விதைகளை விதைப்பு செய்து இப்பணிகளை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மெதூா் ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ், துணைத் தலைவா் சசிக்குமாா், ஊராட்சி செயலா் தரணி, அரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, ஊராட்சி செயலா் ஆனந்தன், மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன், இலுப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.