மீஞ்சூா் அருகே லாரியின் டயருக்கு காற்று பிடித்தபோது, திடீரென வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், அம்ரக் மாவட்டம், சீதாராம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நிராஜ்குமாா் (21). இவா் மீஞ்சூா் அருகே வல்லூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான டயா் பழுது பாா்க்கும் கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், இவா் லாரியின் டயா் ஒன்றுக்கு சனிக்கிழமை காற்று பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென டயா் வெடித்ததில் உள்ளிருந்த இரும்பு வளையம், நிராஜ்குமாரின் தலையில் வேகமாகத் தாக்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை, மீஞ்சூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நிராஜ்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.