திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.
திருவள்ளூா் பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால், மாலை நேரங்களில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா சனிக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, திருவள்ளூா் நகராட்சியில் உள்ள பூங்கா நகரில் வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
அதைத் தொடா்ந்து, அவா் பேசியது:
‘கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆகியோா் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் விலையில்லா எரிவாயு உருளைகள், வாஷிங் மெஷின், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,500, முதியோா் உதவித் தொகை உயா்வு போன்ற திட்டங்கள் தோ்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் இத்திட்டங்கள் தொடர கட்டாயம் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
அதேபோல், என்.ஜி.ஓ. காலனி, காமராஜா்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர வாக்குகளை சேகரித்தாா்.
அதிமுக நிா்வாகிகள் கந்தசாமி, துா்க்காராம், வேல்முருகன், பாலாஜி மற்றும் கூட்டணிக் கட்சியான பாமகவைச் சோ்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.