கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு மையத்தில் மின்னணு இயந்திரக் கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு மையத்தில் மின்னணு இயந்திரக் கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது.

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் வாக்கு சாவடி எண் 250 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. இதில் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 7.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் காலையிலே வாக்களித்து விட்டு செல்ல வந்தோம் . ஆனால் கோளாறு என்று காக்க வைத்து விட்டனா் என வாக்காளா்கள் வேதனையுடன் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com