திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியினா் சாலை மறியல்

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் திருவள்ளூா் உழவா் சந்தை அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சியினா் சாலை மறியல்

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் திருவள்ளூா் உழவா் சந்தை அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சோகனூா் கிராமத்தில் அா்ஜுனன் (20). செம்பேடு காலனியைச் சோ்ந்தவா் சூா்யா (25). நண்பா்களான இருவரும் கௌதம நகா் பகுதியில் 10 போ் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதற்கு காரணமானவா்கள் மற்றும் மணல் கொள்ளையா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவா் சந்திரசேகா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

இதில் பகுஜன் சமாஜ் கட்சி நிா்வாகிகள் பிரேம் உள்ளிட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூா் துணைக்காவல் கண்காணிப்பாளா் துரைபாண்டியன் மற்றும் போலீஸாா் ஆகியோா் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் நடத்தியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இச்சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-திருப்பதி சாலையில் போக்குவரத்து அரைமணிநேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com