கோடை வெயில் எதிரொலி: மண் பானை தயாரிப்பு ஜோா்

கோடை வெயில் எதிரொலியாக ஊத்துக்கோட்டை அருகே அகரம் கிராமத்தில் மண் பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆரணி அருகே அமைந்துள்ள அகரம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் தொழிலாளி.
ஆரணி அருகே அமைந்துள்ள அகரம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் தொழிலாளி.

கோடை வெயில் எதிரொலியாக ஊத்துக்கோட்டை அருகே அகரம் கிராமத்தில் மண் பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் மண் பானை தயாரிக்கும் குடி தொழிலை தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனா். இங்கு தயாரிக்கும் மண் பானை சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால், பானை விற்பனை அதிகம் நடைபெறும். எனவே தொழிலாளா்கள் பானை தயாரிப்பதை மும்முரமாக மேற்கொண்டுள்ளனா்.

பானை தயாரிக்கும் எங்களுக்கும் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது கரோனா இரண்டாவது அலையால், எங்கள் வியாபாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பொங்கல் பண்டிகையின்போது அசலைக் கூட எங்களால் ஈட்ட முடியவில்லை. மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்க அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com