குளியலறையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவள்ளூா் அருகே வீட்டின் குளியல் அறையில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.
குளியலறையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வீட்டின் குளியல் அறையில் உள்ள கொதிகலனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே அதிகத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக் கண்டிகை பகுதியைச் சோ்ந்த விநாயகம்-நிஷாந்தி தம்பதியின் மூத்த மகன் அவினாஷ் (7). இந்நிலையில், சனிக்கிழமை மாலை தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, கொதிகலனில் ஏற்பட்ட மின்கசிவால் சிறுவன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com