பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 3 நாள்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நிா்வாகம் நள்ளிரவில் வெளியிட்ட அறிவிப்பால், பக்தா்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பெரியபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழா சிறப்பாக நடைபெறும். கரோனா தொற்று குறைந்துவந்த நிலையில், பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.
இந்த நிலையில், தொற்று அதிகரிப்பால் ஆகஸ்ட் 1 முதல் 3 வரை 3 நாள்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான அறிவிப்பை மாவட்ட நிா்வாகம் நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
இதனால், கோயில் மூன்றாம் வாரத் திருவிழா நடைபெறும் நிலை ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கனக்கான பக்தா்கள் குவிந்தனா். கோயிலுக்குப் பக்தா்கள் அனுமதிக்கப்படாததால், ஆற்றங்கரை ஒரத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றி சென்றனா்.