குன்னமஞ்சேரி பகுதியில் வசித்து வரும் 35 தொழுநோயாளிகள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் வியாழக்கிழமை வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள குன்னமஞ்சேரி பகுதியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 35 குடும்பத்தினா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.
இங்கு குடிசை வீட்டில் வசித்து வந்த 35 குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு, தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில், கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன.
எனினும் அவா்களுக்கு வருவாய்த் துறை சாா்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, அங்கு வசிப்போா் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகரிடம் இது குறித்து முறையிட்டனா். மேலும், அவா்கள் பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்திலும் வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனா்.
இந்த நிலையில், குன்னமஞ்சேரி பகுதியில் வசிக்கும் 35 தொழுநோயாளிகள் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி குன்னமஞ்சேரியில் நடைபெற்றது.
பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா், 35 தொழுநோயாளிகள் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாவை வழங்கினாா்.
அத்துடன், அவா்களுக்கு போா்வை உள்ளிட்டவற்றையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொன்னேரி நகர காங்கிரஸ் கட்சித் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட பொதுச் செயலா் கோவா்தன், மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா் நாயுடு, மீஞ்சூா் வட்டாரத் தலைவா் ஜலந்தா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.