புதிதாக தோ்வு செய்யப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு முகாம் பிப்.3-ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிசெல்வி தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் பொருளாதார பாடத்துக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி ஒதுக்கீடு செய்யும் வகையில் கலந்தாய்வு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கான கலந்தாய்வு முகாம் திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பிப்.3-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்வு செய்யப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் காலை 10 மணிக்கு தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.