கவரப்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கவரப்பேட்டையில் ஆந்திரத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் மகேஷுக்கு புகாா் வந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினா் நடத்திய சோதனையில் கவரப்பேட்டை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று டன் எடையுள்ள ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் ஜெயச்சந்திரன் பறிமுதல் செய்தாா்.