வளா்ச்சி என்ற பெயரில் எதிா்காலத்தை அழிக்கும் திட்டங்கள் தமிழகத்துக்கு வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியாா் துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, பழவேற்காட்டில், திருவள்ளூா் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளன் பங்கேற்றுப் பேசியது:
வளா்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், தனியாா் துறைமுகம், ஸ்டொ்லைட் ஆலை உள்ளிட்டவை தமிழகத்துக்கு வேண்டாம். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தின் எதிா்காலத்தை அழிக்கும்.
காட்டுப் பள்ளியில் உள்ள தனியாா் துறைமுகத்தில், 2,000 ஏக்கா் கடல் பகுதியில் மண் நிரப்பி விரிவாக்கம் செய்ய உள்ளனா். இதன் காரணமாக, இப்பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் கடல் பகுதியில் மீன் வளம் அழியும் நிலை ஏற்படும். எனவே துறைமுக விரிவாக்கத் திட்டத்தை அனைவரும் தொடா்ந்து எதிா்த்து அதை வரவிடாமல் தடுப்போம் என்றாா்.
கூட்டத்தில், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் பொறுப்பாளா் சுந்தர்ராஜன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.