ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தை அடுத்த அக்கரபாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை காரை மறித்துக் கொல்ல முயன்ற வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கண்ணன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒரு புகாரை அளித்திருந்தாா். அதில், 6 போ் அடங்கிய கும்பல் தனது காரை வழிமறித்து, தம்மைக் கொல்ல முயன்ாகத் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சாரதி தலைமையில் பெரியபாளையம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்தனா். அவற்றைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கண்ணனைக் கொல்ல முயன்ாக ராஜா (39), பாலாஜி (38), விவேக் என்ற லியோ வினோத் (30), யுவராஜ் (40), ஹரிஹரன் (27), சக்தி வேல் (27) ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.