மாதவரம்: செங்குன்றம் பஸ் நிலையம் அருகே பாதிரியரை கண்டித்து ஆா்ப்பாட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்ட தலைவா் மோகன்ஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்புக் குழு செயலாளா் அரசுகுமாா், மாவட்ட பொது செயலாளா் காா்த்திக், மாவட்ட இளைஞா் அணி செயலாளா் வசந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, பாதிரியா் ஜாா்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினா்.
இதில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் சண்முக சுந்தரம், வாசு, அசோக், துளசிராம், பாபு,கண்ணன், பாலாஜி, நாராயணசாமி, மணி, மீஞ்சூா் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.படவிளக்கம் - செங்குன்றம் பஸ் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சாா்பில் பாதிரியா் ஜாா்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்