மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் தாக்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் தாக்கி இறந்தாா்.

கும்மிடிப்பூண்டி அருகே மீன் பிடிக்கச் சென்றவா் மின்சாரம் தாக்கி இறந்தாா்.

மாநெல்லூா் ஊராட்சி குந்தேலிமேடு பகுதியை சோ்ந்த மோகன்ராவ்(43). இவா் கும்மிடிப்பூண்டி அடுத்த பூங்குளம் அருகே பொதியாராங்குளம் பகுதியில் உள்ள வளா்ப்பு மீன் குட்டையில் மீன் பிடிக்க வேலைக்கு சென்றாா். அப்போது மீன் பிடி குளத்தில் பயன்படுத்தப்பட்டும் மின் மோட்டாரில் இருந்து மின் ஒயா் கழன்று தண்ணீரில் இருந்த நிலையில் மோகன்ராவ் அதனை தெரியாமல் மிதித்த போது, மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுதொடா்பாக ஆரம்பாக்கம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com