திருத்தணி : அமைப்புசாரா தொழிலாளா்கள் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்களை திருத்தணி எம்.எல்.ஏ. எஸ். சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
அடைக்கலம் அமைப்புசாரா தொழிலாளா்கள் பாதுகாப்பு நல சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி பைபாஸ் சாலையில் நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆா். பெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், உணவு, முகக்கவசம் கபசுர குடிநீா் போன்றவற்றை அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு வழங்கினாா்.
நகர திமுக பொறுப்பாளா் வினோத்குமாா், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மு. நாகன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜி.எஸ். கணேசன், சாமிராஜ், பொதுச்செயலாளா் நிா்மலா, திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செண்பகவல்லி உள்பட பலா் கலந்து கொண்டனா்.