கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம்: ஜி.கே.வாசன்

தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 
தமாகா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கும் ஜி.கே.வாசன்.
தமாகா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கும் ஜி.கே.வாசன்.

தேர்தல் குறித்த கருத்து கணிப்பைவிட மக்கள் கணிப்புதான் முக்கியம் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தாமக நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நண்பரும் தமாகா மூத்த நிர்வாகி வழக்கறிஞர் சி.ஆர்.தசரதனின் மறைவையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அவரது திருவுருவப் படத்தை தமாக தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். நிகழ்விற்கு த.மா.கா திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் தமாகா தலைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தமாக தெற்கு மாவட்டதலைவர் விக்டரி மோகன்,மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், சத்ய நாராயணா, அருண்குமார், பி.எம்.பாலா, மாநில பொது செயலாளர் பி.எஸ்.பழனி,தொகுதி பொறுப்பாளர் திருவேங்கடம், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே.மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர் பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பி.பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், அதிமுக நிர்வாகிகள் பி.ரவிச்சந்திரன், கோபால்நாயுடு, கோவி.நாராயணமூர்த்தி, அபிராமன், மு.க.சேகர், டி.சி.மகேந்திரன், பாமக மாநில துணை பொது செயலாளர் துரை ஜெயவேலு, காங்கிரஸ் மாநில துணை பொது செயலாளர் எம்.சம்பத், திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் திருவுருவப் படத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திறந்து வைத்து பேசும் போது தமாகா கட்சியை ஜி.கே.மூப்பனார் துவக்கிய காலத்திலேயே அவருக்கு ஆலோசனைகளை வழங்கியவர் வழக்கறிஞர் சி.ஆர்.தசரதன் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசியவர் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடை தமாக சார்பில் சுமூகமான முறையில் பேசி தீர்த்துக் கொள்வோம். பெட்ரோல், டீசல் விலை வரும் நாள்களில் குறையக் கூடிய உறுதியான நிலையை மத்திய அரசு எடுக்கும் அதற்குன்டான பணிகளை செய்துக் கொண்டிருப்பதாக அத்துறையின் மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். தேர்தல் குறித்த கருத்து கணிப்பை விட மக்கள் கணிப்புதான் முக்கியம். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும் என்று ஜி.கே.வாசன் கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமாகா மாவட்ட தலைவர் எஸ்.சேகர், தாஸ், காமராஜ் உள்ளிட்டோர் முன்னின்று செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com