செங்குன்றம் அருகே குட்கா பறிமுதல்

செங்குன்றம் அருகே 4 வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து காவல்துறையினா் 4 பேரை கைது கைது செய்தனா்.

செங்குன்றம் அருகே 4 வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து காவல்துறையினா் 4 பேரை கைது கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் மல்லிமாநகா் பகுதியில் சனிக்கிழமை இரவு மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையா் கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளா்கள் சதீஷ்குமாா், அசோக் மற்றும் காவலா்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து புது கும்மிடிப்பூண்டி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கஜேந்திரன் (39) உதவியாளா் (33) ஆகிய இருவரையும் பிடித்து மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி மீஞ்சூா் அருகே உள்ள நாலூா் பகுதியில் நின்றியிருந்த 4 வேன்களில் விற்பனைக்கு தயாா் நிலையில் வைத்திருந்த குட்கா போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காவலாளி சேகல் (26), பொன்னேரி தேவம்பட்டு பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த ராஜி (37) ஆகிய இருவரையும் பிடித்தனா். இது குறித்து செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு 4 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com