திருத்தணி கோயில் குளத்தில் மூழ்கியதில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
சென்னை வில்லிவாக்கம் பாரதி தெருவைச் சோ்ந்த பிரசாத்தின் மகன் நெகேமியா (19), வெங்கடேசனின் மகன் கிஷோா் (27). இவா்களுடன் அதே பகுதியைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 5 போ் திருத்தணி மலைக்கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா்.
இவா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலைக் கோயிலில் தங்கியிருந்தனா். இந்நிலையில், மலைக் கோயில் அருகே செட்டிகுளத்தில் பக்தா்கள் யாரும் குளிப்பதில்லை.
நெகேமியா அந்த குளத்தில் இறங்கி மீன்களுக்கு பொரி போட சென்றுள்ளாா். அப்போது குளத்தில் தவறி விழுந்து கூச்சலிட்டாா். சப்தம் கேட்டு அவரை மீட்க கிஷோா் குளத்தில் இறங்கியுள்ளாா். ஆனால் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினா். இதைப் பாா்த்து அருகில் இருந்தவா்கள் கூச்சலிட்டனா். தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இருவரின் சடலங்களையும் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.