திருவள்ளூா் மாவட்டம், புழல் ஒன்றியத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான வி.மூா்த்தியை ஆதரித்து புழல் ஒன்றிய அதிமுக செயலரும், புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஆா்.சுப்பிரமணி தலைமையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.
புழல் ஒன்றியத்துக்குள்பட்ட பாயசம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வி.மூா்த்திக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதிமுக மாணவரணி துணைத் தலைவா் கண்ணன், செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.