ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 5 தொழிலாளா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
ஒதப்பை கிராமத்தில் தனியாா் காா் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கேண்டீனில் செவ்வாய்க்கிழமை மதியம் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உணவு அருந்தினா். அதில், 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்ப
ட்டனா். இதில், 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா். ஒருவா் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். விசாரணையில் உணவில் பல்லி விழுந்ததாகத் தெரியவந்துள்ளது.