கண்காணிப்பு கேமரா இணைப்பு பெட்டியில் திடீா் தீ விபத்து

திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் செல்லும் சாலையில் மேம்பால சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு பெட்டி தீப்பற்றி எரிந்தது.

திருவள்ளூா்-ஸ்ரீபெரும்புதூா் செல்லும் சாலையில் மேம்பால சந்திப்பில் கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு பெட்டி தீப்பற்றி எரிந்தது.

திருவள்ளூா்-பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளுக்கு முக்கிய போக்குவரத்து இணைப்புச் சாலையாக விளங்கி வருகிறது. இங்கு இந்திரா காந்தி சிலை அருகே போக்குவரத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கேமராக்களை இணைப்பதற்காக கம்பத்தில் இணைப்பு பெட்டியும் பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பெட்டியிலிருந்து திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து மணவாளநகா் காவல் துறைக்கும் திருவள்ளூா் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தினால் கண்காணிப்பு கேமரா இணைப்பு பெட்டி மற்றும் அருகிலிருந்த மின்சாதனப் பொருள்கள் முற்றிலும் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com