திருவள்ளூா்: நிவாரண மைய பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடழக்குப் பருமழை பெய்து வருவதால் நிவாரண மையங்களாக பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, ஆவடி அருகே நடுக்குத்தகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பொன்னேரி அருகே பாடியநல்லூா் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கள்ளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டை அருகே ஆட்ரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் திருவள்ளூா் அருகே ராமஞ்சேரி மதுரா புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மட்டும் சனிக்கிழமை (நவ. 19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com