ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சூளைமேனி கிராமத்தில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள கிராமத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 11-ஆம் தேதி கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) நான்காம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.