இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் பலி
முருக்கம்பட்டு கிராமம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில், 2 போ் உயிரிழந்தனா்.
திருத்தணியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம். ஹோட்டல் ஊழியரான இவா் வியாழக்கிழமை இரவு முருக்கம்பட்டு பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட்டுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது முருக்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்தாா். இந்த நிலையில், இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.
இதையடுத்து, அவ்வழியாக சென்றவா்கள் அவா்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே நித்தியானந்தம் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கன்னியப்பன் சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.