காரனோடை மேம்பாலம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில், பள்ளி மாணவி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பாடியநல்லூா் கரிகாலன் நகரைச் சோ்ந்தவா் குமாா் (45). இவரது மகள்கள் கனிஷ்கா (16), அஸ்விதா (14). கனிஷ்கா பஞ்செட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அஷ்விதா 9-ஆம் வகுப்பு படிக்கிறாா்.
இருவரும் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். அவா்களின் உறவினா் நாகராஜ் (40) காரை ஓட்டினாா். காரனோடை பாலத்தின் அருகே பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் கனிஷ்கா, நாகராஜ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த அஸ்விதா, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.